யூரியா உர விநியோகத்தின் முழுமையான தணிக்கை தேவை: விவசாய அமைச்சர்

Date:

விவசாயிகளுக்கு யூரியா உரம் விநியோகம் செய்வது தொடர்பில்  முழுமையான தணிக்கையை  மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு விவசாய  அமைச்சர் மஹிந்த அமரவீர,பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கு யூரியா உரம் விநியோகம் செய்வதில், குளறுபடிகள் மற்றும் குறைபாடுகள் இருப்பின், அடுத்த மாத பருவத்தில் உரம் விநியோகிக்கும் பணியில், அவற்றை சரி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொறுப்பான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதே இதன் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உர விநியோகம் நிறைவடைந்தவுடன் இந்த முழுமையான கணக்காய்வு நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யால பருவத்துக்கான யூரியா உர விநியோகம் 98 வீதத்தால் நிறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

யூரியா உர விநியோகத்தில் சுமார் 2 வீதமான பணிகள் இன்னும் எஞ்சியுள்ளதாகவும், இந்த வாரத்திற்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...