ரஞ்சன் விடுதலைக்கான ஆவணங்களில் கையொப்பமிட்டார்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியுடன், சிறைவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கான ஆவணங்களில் தாம் கையொப்பமிட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  (26) அல்லது திங்கட்கிழமை (29) விடுதலை செய்யப்படுவார் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக அயராது உழைத்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஹரின் பெர்னாண்டோ நன்றியும் தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 2017 இல் நீதித்துறையைப் பற்றி அவமதிக்கும் கருத்துக்கள் தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில், நடிகராக மாறிய அரசியல்வாதிக்கு உச்ச நீதிமன்றத்தால் ஜனவரி 12, 2021 அன்று நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் திரு ராமநாயக்கவை மன்னித்து விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

சுற்றாடல் பிரச்சினைகளை முறையிடுவதற்கு புதிய WhatsApp இலக்கம்

சுற்றாடல் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...