ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால் 16 மில்லியன் ரூபா நட்டம்!

Date:

கடந்த வாரங்களில் பிரதான ரயில் மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால், சுமார் 16 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆசனங்கள் முற்பதிவு செய்யப்படும் பதுளை – கொழும்பு ரயில்களும் இரத்து செய்யப்பட்டதால், நாளாந்தம் 2 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், கடந்த முதலாம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்த நட்டம் பதிவாகியுள்ளது.

நாவலப்பிட்டி – நானுஓயா இடையிலான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட இடையூறுகளால், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த ரயில்களையும் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கொழும்பு – பதுளை இடையிலான தபால் ரயில்கள் சேவையில் ஈடுபடாது என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

“1win Официальный Сайт Букмекерской Конторы Для Ставок На Спорт

1win Ставки На Спорт И Онлайн Казино Бонус 500%ContentIn...

1win Ставки На Спорт и Онлайн Казино Бонус 500%”

1win официальный Сайт Букмекерской Конторы Ставки ОнлайнContentОбзор На что...

Пинко Казино Pinko Casino Актуальное Зеркало Играть На Реальные деньги В Пинко Casino

Pinco Пинко Казино Регистрация И Доступ ко Рабочим Зеркалам"ContentПромо...

“кент Казино Играть и Официальном Сайте Kent Casino

Кент Казино Официальный Сайт Зеркало Kent Casino со БонусамиContentособенности...