எதிர்வரும் அடுத்த மாதம் 4ஆம் திகதி விமல் வீரவன்ச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என சுயேட்சைக்குழு தெரிவித்துள்ளது.
ஶ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர், அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் இதனை கூறினர்.
புதிய அரசியல் கூட்டணியின் பெயரும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மேலும், தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் வெளியிடப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பான பல சுற்றுக் கலந்துரையாடல்கள் கடந்த சில நாட்களாக சுயேட்சைக்கட்சிகள் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றன.
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 9 கட்சிகள் இந்த புதிய கூட்டணியை உருவாக்க தீர்மானித்துள்ளன.