விமல் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும்!

Date:

எதிர்வரும் அடுத்த மாதம் 4ஆம் திகதி விமல் வீரவன்ச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என சுயேட்சைக்குழு தெரிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர், அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் இதனை கூறினர்.

புதிய அரசியல் கூட்டணியின் பெயரும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மேலும், தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் வெளியிடப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பான பல சுற்றுக் கலந்துரையாடல்கள் கடந்த சில நாட்களாக சுயேட்சைக்கட்சிகள் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றன.

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 9 கட்சிகள் இந்த புதிய கூட்டணியை உருவாக்க தீர்மானித்துள்ளன.

Popular

More like this
Related

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...