QR முறைமையில் 5 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன: எரிசக்தி அமைச்சர்

Date:

இதுவரை நாட்டில் ஐந்து மில்லியன் வாகனங்கள் தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இந்த விடயம் தெரிவித்துள்ளார்.

அமைப்புகளை செயல்படுத்த கடினமாக உழைத்த ICTA  உட்பட அனைத்து மேம்பாட்டு ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

மேலும், இந்த அமைப்புகளை செயல்படுத்த கடின உழைப்புக்கு உழைத்த இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓ.சி முறையை ஏற்றுக்கொண்டதற்காக மற்றும் பங்களித்த மற்ற அனைவருக்கும்’ என்று அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று   முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறைப்படி எரிபொருள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...