அடுத்த பதினைந்து நாட்களில் கொவிட் தொற்று தீவிரமாகலாம்: சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Date:

அடுத்த பதினைந்து நாட்களில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகலாம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் சமூகம் கூடும் இடங்களில் நோய் அறிகுறிகளுடன் கூடியவர்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருவதாகவும் உபுல் ரோஹன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார வைத்தியர் அலுவலகத்தில் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் இல்லாததால் நோயாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் துரதிஷ்டவசமான மரணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சுகாதார ஆலோசனைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...