அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 46 பேர் நாடு கடத்தப்பட்டனர்!

Date:

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த 46 பேர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை ஏற்றி அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரின் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பலர் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடுகளுக்கு பபயணித்துள்ளனர் அத்துடன் பலர் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் கூறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே இலங்கையைச் சேர்ந்த 46 சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களின் படகினை கடந்த ஜூலை மாதம் 21ம் திகதி அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்குள் நுழைந்த போது அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூலை 6 ஆம் திகதி மட்டக்களப்பு வாழைச்சேனையிலிருந்து மீன்பிடி படகில் பயணத்தை ஆரம்பித்தாக குறிப்பிடப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதனையடுத்து 46 பேரை ஏற்றிய அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரின் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...