இலங்கை குறித்து பிரித்தானிய அரசின் முக்கிய தீர்மானம்!

Date:

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தற்போது மிகவும் ஸ்திரமாக உள்ளதாக சுட்டிக்காட்டி முன்பு விதித்திருந்த பயண ஆலோசனையை பிரித்தானிய அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், ஊரடங்கு உத்தரவு மற்றும் அவசரகால நிலை பிரகடனத்தை அடுத்து மே மாதம் பயண ஆலோசனை பிரித்தானிய புதுப்பித்தது.

இந்நிலையில் இலங்கைக்கான பயண ஆலோசனையை இரத்து செய்துள்ள பிரித்தானியா, பாதுகாப்பு நிலைமை ஓரளவு மேம்பட்டிருந்தாலும் எரிபொருள், மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளது.

ஆகவே இலங்கைக்கு பயணிக்கத் திட்டமிடும் தமது நாட்டவர்களை தேவையான மருந்துகளை எடுத்துச் செல்லவும், போக்குவரத்து தொடர்பாக உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பிரான்ஸ், நோர்வே, சுவிட்ஸர்லாந்து முதலான நாடுகளும் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல்களை நீக்கியுள்ளன.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...