இலங்கை மற்றும் ஓமன் உறவுகள் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது!

Date:

ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட், இலங்கை – ஓமன் உறவுகள் கடந்த, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற தலைப்பில் 164 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நூல் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான உறவுகளை விபரிப்பதுடன் அதன் எதிர்காலக் கண்ணோட்டத்தை முன்னறிவிக்கிறது.

பிளாக் ரூ ஒயிட் மீடியா அண்ட் சர்வீசஸ் எல்.எல்.சியால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம்,  கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி வெளியுறவு அமைச்சகத்தின் இராஜதந்திர நிறுவனத்தில், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இராஜதந்திர விவகாரங்களின் துணைச் செயலர் ஷேக் கலீஃபா அல் ஹார்தியால் வெளியிடப்பட்டது.

இந்தப் புத்தகம் ஓமன் மற்றும் இலங்கையின் நட்புறவின் வலிமைக்கு மட்டுமல்ல, இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத்தின் குணாதிசயத்தின் வலிமைக்கும், வாழ்க்கையின் ஒவ்வொரு முயற்சியையும் அவர் மேற்கொள்ளும் ஆர்வத்துக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு சான்றாகும் என என்று ஓமன் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

பெப்ரவரி 17, 2021 அன்று நினைவுகூரப்பட்ட இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...