உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

Date:

கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை 2021 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட் 19 வெள்ளிக்கிழமை தொடங்கும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் ஆகஸ்ட் 20 சனிக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் கடினமான நிலைமைகள் காரணமாக மாணவர்களால் நடைமுறைப் பரீட்சைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பரீட்சைகள் முடிவடைந்து உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், மூன்றாவது சுற்று மதிப்பீட்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேனா தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டிற்கான உயர்தரப்பரீட்சை தேர்வுக்கான விண்ணப்ப திகதி ஆகஸ்ட் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...