உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் நாடுகளுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன தூதுவர் ‘Qi Zhenhong’ அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி டுவிட்டர் செய்தியில் இந்த சந்திப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஒரே சீனா கொள்கை மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கோட்பாடுகளுக்கு இலங்கையின் உறுதியான உறுதிப்பாட்டை சீன தூதுவர் முன்னிலையில் மீண்டும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய உலகளாவிய பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களில் இருந்து நாடுகள் விலகிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பரஸ்பர மரியாதை மற்றும் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை அமைதியான ஒத்துழைப்பு மற்றும் மோதலின்மைக்கு முக்கியமான அடித்தளங்கள் என்று அவர் மேலும் கூறுகிறார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...