தற்போதுள்ள எரிபொருள் வரிசையை குறைக்கும் வகையில் எதிர்வரும் 3 நாட்களில் மேலதிக எரிபொருள் இருப்புக்களை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில், எரிபொருள் ஏற்றுதல் தாமதம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தாமதமாக பணம் செலுத்துவதால் எரிபொருள் வரிசைகள் உருவாக்கப்பட்டன.
போதிய எரிபொருள் இருப்புக்கள் இல்லாத காரணத்தினால் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திறக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசை காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.