திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயுவின் விலை 8 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் அறிவித்துள்ளார்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவுக்கு மேல் குறைக்கப்படலாம்.
இதேவேளை அரிசி மற்றும் ஒரு கோப்பை சாதாரண தேநீர் ஆகியவற்றின் விலையையும் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது.