காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய பெண்ணின் வீசா ரத்து!

Date:

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த பெண்ணின் வீசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேநேரம், இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக பெறப்பட்ட விசா மூலம் அவர் இலங்கையில் தங்கியிருப்பதாகவும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கெய்லி ஃப்ரேசர் எனப்படும் குறித்த பெண் தான் தங்கியிருந்த காலத்தில் காலி முகத்திடல் போராட்டத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஊக்குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3 ஆம் திகதி குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் இலங்கையில் அவர் தங்கியிருந்த இடத்தை அணுகி  அவர் தங்கியிருப்பதற்கான காரணத்தை ‘சந்தேகத்துக்குரியது’ எனக் கூறி அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர்.

Popular

More like this
Related

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...

நீர்கொழும்பு, கட்டான பகுதிகளில் நீர்வெட்டு

நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல்...

‘தூதர்களை வெளியேற்றினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்’: ஐரோப்பா, அரபு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய புரட்சிகர...

Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!

கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய 'டிட்வா'  சூறாவளியினால்...