காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய பெண்ணின் வீசா ரத்து!

Date:

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த பெண்ணின் வீசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேநேரம், இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக பெறப்பட்ட விசா மூலம் அவர் இலங்கையில் தங்கியிருப்பதாகவும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கெய்லி ஃப்ரேசர் எனப்படும் குறித்த பெண் தான் தங்கியிருந்த காலத்தில் காலி முகத்திடல் போராட்டத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஊக்குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3 ஆம் திகதி குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் இலங்கையில் அவர் தங்கியிருந்த இடத்தை அணுகி  அவர் தங்கியிருப்பதற்கான காரணத்தை ‘சந்தேகத்துக்குரியது’ எனக் கூறி அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...