குளிரூட்டப்பட்ட உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்?

Date:

75 சதவீத மின்சாரக் கட்டண உயர்வால் குளிர்சாதன உணவுப் பொருட்களான தயிர், ஐஸ்கிரீம் மற்றும் இறைச்சி போன்ற குளிரூட்டப்பட்ட மற்றும் உறைந்த பொருட்களின் விலை அதிகரிக்கும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கணித்துள்ளது.

கட்டண உயர்வினால் உணவக உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உணவுப் பொருட்களின் விலையை குறைத்ததை அடுத்து மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.

அதேபோல வாடிக்கையாளர்களை மீண்டும் உணவகங்களுக்கு ஈர்க்கும் வகையில் வழக்கமான தேநீர் கோப்பை ரூ.30 மற்றும் மதிய உணவுப் பொதிகள் 10 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், குளிர்சாதனப் பொருட்களுக்கான விலைகள் மட்டுமின்றி கடைகளில் மின் கட்டணம் உள்ளிட்ட விலை உயர்வால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உற்பத்தி நிறுவனங்கள் பொதுமக்கள் மீது திணிக்கப்படும் விலையை நிர்ணயிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...