கொழும்பில் வாழ் மக்களின் பேஸ்புக் கணக்குகளை பார்ப்பதே பொலிஸாரின் வாடிக்கையாகிவிட்டது: மனோ

Date:

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவான கொழும்பில் வாழும் மக்களின் முகநூல் கணக்குகளை பார்ப்பது பொலிஸாரின் பிரதான கடமைகளில் ஒன்றாகும் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிஸார் கொழும்பில் வாழும் மக்களின் முகநூல் கணக்குகளுக்குள் பிரவேசித்து அதனை பதிவிறக்கம் செய்து,  முடிவடைந்து விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு மக்களின் பின்னால் சென்று அச்சுறுத்துகின்றனர்.

அத்தோடு மக்களைப் பின்தொடர்ந்து கொண்டுபோய் பயமுறுத்துவதுதான் பொலிஸார் பிரதான வேலை, இவ்வாறான செயற்பாடுகளை தாம் முற்றாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல ஜனாதிபதி மாளிகை ஆக்கிரமிக்கப்பட்ட போது, பொலிஸார் கூட தங்கள் சீருடையில் உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்துவதை தான் பார்த்ததாக அவர் கூறினார்.

இவற்றைப் பார்த்த பொதுமக்களும் மிருகக்காட்சிசாலையை பார்ப்பது போல் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றதாகவும் எனவே பொது மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என பொலிஸாரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...