கொவிட்-19 வைரஸ் தொற்று நோயால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் நீண்டகாலம் நீடிக்கும் என்று பிரிட்டனில் உள்ள ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘கொவிட்-19’ வைரஸால் பாதிக்கப்பட்ட ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு மூளை பாதிப்பு வெளிப்படுகிறது என்று அவர்கள் மேலும் விளக்கியுள்ளார்கள்.
பல ஐரோப்பிய நாடுகளில் ‘கொவிட் 19’ நோயால் பாதிக்கப்பட்ட 1.25 மில்லியன் நோயாளிகளை உள்ளடக்கிய ஆய்வுக்குப் பிறகு ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை, ‘கொவிட் 19’ல் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பு காரணமாக, சுயநினைவின்மை, டிமென்ஷியா போன்றவை காணப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.