நாட்டில் பல பகுதிகளுக்கு வெள்ளம் மற்றும் மண்சரிவு எச்சரிக்கை!

Date:

அடுத்த 24 மணித்தியாலங்களில் பஸ்கொட, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, மாத்தறை, திஹாகொட, கம்புருபிட்டிய, முலட்டியன மற்றும் தெவிநுவர ஆகிய பகுதிகளில் தாழ்நிலப் பிரதேசங்களில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், களுகங்கையின் பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் அலபத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 3 மணித்தியாலங்கள் முதல் 24 மணித்தியாலங்களுக்குள் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த பகுதியினூடாக பயணிக்கும் வாகனங்களும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.

இதேவேளை, கடும் மழை காரணமாக காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் மண்சரிவு அபாயப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பிரதேச செயலகப் பிரிவுகளின் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...