பசும்பால் உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சி: மில்கோ நிறுவனம்!

Date:

போதுமான அளவு பால் உற்பத்தி செய்யப்படாததால், உள்ளூர் சந்தையில் பால் பால்மா உள்ளிட்ட பொருட்கள் குறைந்துள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு 600,000 லீற்றர் பால் தேவைப்படுவதாகவும், தற்போது 140,000 லீற்றர் பால் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அந் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாடுகள் சினைப்படுத்தப்படாமையினால், திரவ பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு மேலாக, மாடுகள் சினைப்படுத்தல் குறைந்துள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிராமிய மட்டத்தில் திரவ பால் உற்பத்தியாளர்களின் பசுக்களை சினைப்படுத்துவதற்கான விசேட திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் எரிபொருள் நெருக்கடியால் திரவ பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...