பேருந்துகள், முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருளை விநியோகிக்க தனி QR குறியீடு!

Date:

பொதுப் போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளின் அளவைக் கண்டறிந்து டிப்போ மற்றும் எரிபொருள் நிலையங்களில் இருந்து தனி QR குறியீட்டின் மூலம் எரிபொருளை வழங்கும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் வாரத்திற்குள் நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் வரை இலங்கை போக்குவரத்து சiபா மற்றும் பஸ்டன் மாவத்தையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், தொழில்சார்ந்த முச்சக்கரவண்டிகள் மற்றும் டெக்சிகளை தனித்தனியாக இனங்கண்டு, அவற்றிற்கு வழங்கப்படும் பொதுவான எரிபொருள் ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக அதிக எரிபொருளை வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக இன்று காலை போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண சபைகள் இணைந்து வாகனங்களை ஒழுங்குபடுத்துவதுடன், எரிசக்தி அமைச்சுக்கு தகவல்களை வழங்கி எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...