பேருந்துகள், முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருளை விநியோகிக்க தனி QR குறியீடு!

Date:

பொதுப் போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளின் அளவைக் கண்டறிந்து டிப்போ மற்றும் எரிபொருள் நிலையங்களில் இருந்து தனி QR குறியீட்டின் மூலம் எரிபொருளை வழங்கும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் வாரத்திற்குள் நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் வரை இலங்கை போக்குவரத்து சiபா மற்றும் பஸ்டன் மாவத்தையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், தொழில்சார்ந்த முச்சக்கரவண்டிகள் மற்றும் டெக்சிகளை தனித்தனியாக இனங்கண்டு, அவற்றிற்கு வழங்கப்படும் பொதுவான எரிபொருள் ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக அதிக எரிபொருளை வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக இன்று காலை போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண சபைகள் இணைந்து வாகனங்களை ஒழுங்குபடுத்துவதுடன், எரிசக்தி அமைச்சுக்கு தகவல்களை வழங்கி எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...