போராட்டத்தை நசுக்கும் அரசாங்கம் எந்த பதவி வழங்கினாலும் ஏற்கப் போவதில்லை: சஜித்

Date:

பொதுப் போராட்டத்தை நசுக்கும் அரசாங்கம் எந்த பதவி வழங்கினாலும் இணையப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சகல பேதங்களையும் மறந்து கருத்து வேறுபாடுகளை ஒரு கணம் ஒதுக்கி வைத்துவிட்டு அரச வன்முறையை முறியடிக்க ஒன்றிணையுமாறு அனைத்து சக்திகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் நாட்டின் பிரஜைகளின் உரிமைகளை மீறுவதாக ஸ்ரீலங்கா அறக்கட்டளையில் நடைபெற்ற அடக்குமுறைக்கு எதிரான மக்கள் பேரணியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச தனது பிரியாவிடை நிகழ்வில் ஆரம்பித்த பயங்கரவாத பாணி அடக்குமுறை அமுல்படுத்தப்படுவதாகவும் மக்களின் உரிமைகளை மீறுவதற்கோ அழிக்கவோ எவருக்கும் உரிமை இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அடக்குமுறையை தனது ஆயுதமாக பாவிக்கும் சூழ்நிலையில் நாடு மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், கலைஞர்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய அரசியல் கட்சிகளின் தூதரகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...