அரிசி,பருப்பு உள்ளிட்ட 8 வகையான பொருட்களின் விலை குறைப்பு!

Date:

ச.தொ.ச மூலம் விற்பனை செய்யப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட 8 வகையான பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்புடன் இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அதன் தலைவர் பசந்த யாப்பா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி, துவரம் பருப்பு, பூண்டு மற்றும் கோதுமை மா போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ள ச.தொச. கடைகளின் ஊடாக ஒரு கிலோ கோதுமை மாவை 310 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை கொண்டைக்கடலை 185 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை நாடு ஒரு கிலோ 194 ரூபாவுக்கும், ஒரு கிலோ சிவப்பு பருப்பு 429 ரூபாவுக்கும் ஒரு கிலோ வெள்ளை சீனி 279 ரூபாவுக்கும் ச.தொ.ச ஊடாக மக்கள் கொள்வனவு செய்ய முடியும் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...