ஆகஸ்ட் பிறந்த குழந்தைகளுக்கான டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்கள்!

Date:

தேசிய பிறப்புச் சான்றிதழை டிஜிட்டல் வடிவில் தற்போது ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்  வழங்கி வருகிறது.

ஆகஸ்ட் 1, 2022 க்குப் பிறகு பிறந்த குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள் என்று திணைக்கள பதிவாளர் ஜெனரல் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழுக்கான திட்டம் இறுதியில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.

குழந்தை 15 வயதை அடையும் போது, டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழில் அவர்களின் பெயருக்கு அடுத்ததாக பட்டியலிடப்பட்ட எண் அவர்களின் தேசிய அடையாள அட்டை எண்ணாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பதிவாளர் நாயகத்தின் பிரகாரம், ஆங்கிலம்-தமிழ் அல்லது சிங்களம்-தமிழ் ஆகிய மொழிகளில் மொழிமாற்றங்களை அனுமதிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...