ஆரம்ப பிரிவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு!

Date:

அனைத்து அரசுப் பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவாக சம அளவிலான அரிசியை வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் வழங்கப்பட்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த மதிய உணவில் பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க போலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் விற்றமின்கள் அடங்கியதாக திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் உணவுப் பற்றாக்குறை என்பன பாடசாலை மாணவர்களின் போசாக்கு விடயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஆரம்பப் பிரிவுகளில் உள்ள பிள்ளைகளின் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் உணவு வழங்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...