“இலங்கைக்கு ஆதரவளிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயார்”

Date:

இலங்கை எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க பல துறைகளில் ஆதரவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா உள்ளிட்ட குழுவினர் இன்று (செப்.12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் பல பகுதிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் சென் சென் பிரதிப் பணிப்பாளர் உத்சவ் குமார் மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...