உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ‘எல்ல ஒடிஸி’ ரயில் பயணங்கள் அதிகரிப்பு!

Date:

கண்டியில் இருந்து எல்ல வரையிலான புதிய ரயில் சேவையான ‘எல்ல ஒடிஸி’க்கு என இரண்டு ரயில் பயணங்களை இலங்கை ரயில்வே திணைக்களம் சேர்த்துள்ளது.

எல்ல ஒடிஸி ரயில் சேவையின் கூடுதல் ரயில் பயணங்கள் செப்டம்பர் 8 ஆம் திகதி தொடங்கும் என ரயில்வே துணை செயல்பாட்டுக் கண்காணிப்பாளர் வி.எஸ். பொல்வட்டகே தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வியாழனன்றும், ‘எல்ல ஒடிஸி’ கொழும்பில் இருந்து பதுளை வரை இயங்கும், வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் பதுளையிலிருந்து திரும்பும் பயணத்தை மேற்கொள்ளும்.

மேலும், உள்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் தேவை அதிகமாக இருந்ததால் மேலும் இரண்டு ரயில் பயணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று பொல்வத்தகே கூறினார்

பயணிகளின் பயணத்தை மேற்கொள்ள எதிர்பார்க்கும் நாளிலிருந்து 14 நாட்களுக்கு முன்னதாகவே ஆசன முன்பதிவுகளை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...