எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஜனாதிபதி இங்கிலாந்து பயணம்!

Date:

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்துக்கு செல்லவுள்ளார்.

இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார்.

ஜனாதிபதி 17 அல்லது 18 ஆம் திகதி கிரேட் பிரிட்டனுக்கு செல்லவுள்ளார். எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் பிரித்தானிய மக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் 19ஆம் திகதி இலங்கையில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

1952 மற்றும் 1972 க்கு இடையில், ராணி இரண்டாம் எலிசபெத் காமன்வெல்த் தலைவராகவும் இலங்கை ராணியாகவும் இருந்தார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...