கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 94 சதவீதம் உயர்ந்துள்ளது!

Date:

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் உணவு வகையின் விலை 93.7 வீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் உணவுப் பிரிவில் ஆண்டு இலட்ச பணவீக்கம் 90.9 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உணவு வகைகளில் புதிய மீன், பழங்கள், ரொட்டி, பிஸ்கட், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

இதேவேளை, ஜூலை மாதத்தில் 46.5 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பிரிவின் வருடாந்த புள்ளி பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 50.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வீடுகள், குடிநீர், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, ஜவுளி மற்றும் பாதணிகள் ஆகியவற்றின் விலையேற்றம் காரணமாகும்.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 64.3 சதவீதமாக அதிகரித்தது. இது கடந்த ஜூலை மாதம் 60.8 சதவீதமாக இருந்தது.

Popular

More like this
Related

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...

மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன!

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல தேசியப் பூங்காக்களை மீண்டும்...