சுயேட்சையாக இணைந்த எம்.பி.க்கள் குழுவின் புதிய கூட்டணி இன்று அறிவிக்கப்படும்!

Date:

அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயேட்சையாக இணைந்த எம்.பி.க்கள் குழுவின் புதிய கூட்டணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.

கூட்டணியின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், புதிய கூட்டணியின் பெயர் மற்றும் அதன் தலைவர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும் என அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்பட்ட ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று உருவாகும் புதிய கூட்டணி இந்த நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் புதிய கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போதுள்ள அரசியலமைப்பை மாற்றி சித்தாந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதே புதிய கூட்டணியின் பிரதான நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...