இலங்கையின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையை எட்டுவதற்கான ஆரம்ப கலந்துரையாடல் இன்று (14) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான நேபாள தூதுவர் பசு தேவ் மிஸ்ரா கலந்துகொண்டார்.
இக்கலந்துரையாடலின் போது இரு நாட்டு இளைஞர்களும் பல்கலைக்கழக கல்வி மற்றும் சுற்றுலாத் துறை வாய்ப்புகளில் இணைவதற்கு இளைஞர் பரிமாற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.
இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக நடவடிக்கைகளை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் நேபாள அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.