டுபாயில் வேலைபெற்று தருவதாக கூறி பண மோசடி!

Date:

டுபாயில் வேலை தேடும் நபர்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஏஜென்சியின் நிர்வாகத்தை மேற்பார்வையிட பெண் வேறொரு நபரை பணியமர்த்தியதாகவும் அவர் துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் டுபாயில் வேலை வழங்குவதாக உறுதியளித்து
விண்ணப்பதாரர்களிடமிருந்து 450,000 ரூபாய் பெற்றுவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் SLBFE இல் பதிவு செய்யப்பட்டுள்ளதா மற்றும் பணம் கொடுப்பதற்கு முன்னர் அவை செல்லுபடியாகும் நிறுவனங்களா என்பதை சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களுக்கு SLBFE ஐ அதன் தொலைபேசியின் ஊடக 011-2864241 அல்லது 1989 மூலம் தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...