திரிபோஷ குற்றச்சாட்டுக்கு சுகாதார தொழிற்சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: கெஹலிய மிரட்டல்!

Date:

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன திரிபோஷ மா தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, திரிபோஷாவில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்துள்ளார்.

திரிபோஷாவில் ஆபத்தான அளவு அஃப்லாடாக்சின் இருப்பதாக பல சுகாதார சங்கங்கள் குற்றம்சாட்டின.

இதனையடுத்து இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறிய ரம்புக்வெல்ல, தொழிற்சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், நாம் முழுமையான சேதன பசளை பாவனைக்கு மாறிய வேளையில் திரிபோஷ உற்பத்திக்கான மூலப்பொருளான சோளத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இது தொடர்பில் பிரச்சினை நிலவியது அதனை நான் மறுக்கவில்லை. கர்ப்பிணிகளுக்கான திரிபோஷாவுக்கான தட்டுப்பாடானது யுனிசெப்பின் உதவியுடன் அது நிவர்த்திக்கப்பட்டது.

எவ்வாறாயினும், திரிபோஷவில் எஃப்ளொடொஸின் அடங்கியுள்ளதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது என பொறுப்புடன் கூறுகிறேன் எனவும் திரிபோஷவில் நச்சு உள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை எங்களிடம் 14 வகையான அத்தியாவசிய மருந்து வகைகள் போதுமான அளவு இருப்புக்கள் மற்றும் 383 வகையான அத்தியாவசிய மருந்துகளை முகாமைத்துவ மட்டத்தில் வைத்துள்ளோம் என சுகாதார அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

‘ஒரு உயிர் காப்போம்’: கஹட்டோவிட்டYMMA நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்!

சமூக சேவையை முன்னிறுத்தி, கஹட்டோவிட்ட YMMA  கிளையின் ஏற்பாட்டில் விசேட இரத்த...

சுங்கத்துறை மற்றும் இறக்குமதி சிக்கல்களுக்கு உடனடி தீர்வு: அமைச்சர்களுடன் CUBA வர்த்தகக் கூட்டணி  சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டணி (CUBA) பிரதிநிதிகள்,...

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: தனியார் பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...