படகுகளை பயன்படுத்தி மனித கடத்தலில் ஈடுபட்ட ஐவர் காத்தான்குடியில் கைது!

Date:

காத்தான்குடி முத்துவாரன் கரையோரப் பகுதியில் படகுகளில் சட்டவிரோத குடியேற்றம் மூலம் மனித கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் களவாஞ்சிக்குடி முகாம் அதிகாரிகள் இணைந்து நேற்று இரவு மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட குழுவொன்றுக்கு ஐந்து சந்தேக நபர்களும் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது நான்கு டிங்கி படகுகள் மற்றும் 70 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்களை காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

28, 31, 33, 37 மற்றும் 44 வயதுடைய சந்தேகநபர்கள் மட்டக்களப்பு மற்றும் நாவலடியைச் சேர்ந்தவர்கள்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...