மறைந்த அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வரின் நினைவேந்தல்!

Date:

இலங்கை  பாராளுமன்றத்தின் உறுப்பினராக அமைச்சராக நீண்ட காலம் பணிபுரிந்தவரும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மொழி பெயர்ப்பாளரும் இலங்கை முஸ்லிம் வரலாற்றில் ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ என்ற நிகழ்ச்சித்திட்டத்தின முன்னோடியுமான மர்ஹும் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் மறைந்து 5 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.

இதனை முன்னிட்டு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தினால் நேற்று 31 ஆம் திகதி அன்னாரின் நினைவுப் பேருரை நிகழ்ச்சி முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் சுஹைர் முகமது ஹம்தல்லாஹ் செய்த் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர், அல்ஹாஜ் எம்.டி.எம்.இக்பால் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நினைவுப் பேருரையை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க வழங்கினார்.

இதேவேளை மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் நினைவாக தேவையுடைய சில மாணவர்களுக்கு புலைமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 2 – 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களைச் சேர்க்க புதிய வழிகாட்டல்!

மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பது குறித்து புதிய சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. 5 மற்றும்...

தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக குறைத்த அமைச்சர்கள்!

அமைச்சரவை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை...

மாபெரும் ஆளுமை ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு:ரவூப் ஹக்கீம் எம்.பி ஆழ்ந்த இரங்கல்

மருத்துவப் பேராசிரியரும், இலங்கையின் சிறுநீரகவியல் துறையின் தந்தையுமான வித்யா ஜோதி பேராசிரியர்...

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இன்று (31) நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும்...