முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் 63வது நினைவு தினம்!

Date:

மறைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 63வது நினைவு தினம் இன்று (26) ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வு மிகவும்  நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 22ஆவது நினைவு தினம் மற்றும் மறைந்த அமைச்சர் அநுர பண்டாரநாயக்கவின் 14ஆவது நினைவுதினமும் இங்கு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, துமிந்த திஸாநாயக்க, குமார் வெல்கம, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பாண்டு பண்டாரநாயக்க, ஜீவன் குமாரதுங்க, பீலிக்ஸ் பெரேரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அத்தோடு  பண்டாரநாயக்கவின் மகள்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுனேத்ரா பண்டாரநாயக்க, கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...