வாளுக்காராம விஹாரையின் எசல பெரஹெர சடங்குகளில் ஜனாதிபதி

Date:

கொழும்பு கொள்ளுபிட்டி வாளுக்காராம விஹாரையின் வருடாந்த எசல பெரஹெர பாரம்பரிய சடங்குகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று கலந்துகொண்டார்.

59வது வருடாந்த எசல பெரஹெர பாரம்பரிய சடங்குகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

பாரம்பரிய சடங்குகளைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு சந்தன மரத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலையை ஊவா மாகாண பிரதம சங்க நாயக்கவும் கொள்ளுபிட்டி வாளுக்காராம விஹாரையின் விஹாராதிபதியுமான மஹரகம நந்தநாயக்க தேரர் மற்றும் உடவௌ கோலித தேரர் ஆகியோர் இணைந்து கையளித்தனர்.

கோட்டே ஶ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மஹா சங்கத்தின் மஹாநாயக்க தேரர், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி அதி வணக்கத்துக்குரிய இத்தேபன தம்மாலங்கார நாயக்க தேரர் ஆகியோரும் இப்பாரம்பரிய சடங்குகளில் பங்கெடுத்தனர்.

மேலும் இப்பாரம்பரிய சடங்குகளில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, விதுர விக்கிரமநாயக்க, ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, இலங்கைக்கான மியன்மார் தூதுவர், முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, அனோமா கமகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...