அரிசி,பருப்பு உள்ளிட்ட 8 வகையான பொருட்களின் விலை குறைப்பு!

Date:

ச.தொ.ச மூலம் விற்பனை செய்யப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட 8 வகையான பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்புடன் இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அதன் தலைவர் பசந்த யாப்பா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி, துவரம் பருப்பு, பூண்டு மற்றும் கோதுமை மா போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ள ச.தொச. கடைகளின் ஊடாக ஒரு கிலோ கோதுமை மாவை 310 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை கொண்டைக்கடலை 185 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை நாடு ஒரு கிலோ 194 ரூபாவுக்கும், ஒரு கிலோ சிவப்பு பருப்பு 429 ரூபாவுக்கும் ஒரு கிலோ வெள்ளை சீனி 279 ரூபாவுக்கும் ச.தொ.ச ஊடாக மக்கள் கொள்வனவு செய்ய முடியும் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...