இலங்கையின் ஆசியக் கோப்பை வெற்றியைக் கொண்டாடிய ஆப்கானிஸ்தான்: வீதிகளிலும் சமூக ஊடகங்களிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்!

Date:

நேற்று இடம்பெற்ற ஆசிய கிண்ண கோப்பை 2022 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இலங்கை தோற்கடித்ததால் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீதிகளில் இறங்கி கொண்டாடினர்.

தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, ஆறாவது முறையாக ஆசியக்கிண்ணத்தை வென்றதையடுத்து, ஆப்கானிஸ்தான் வீரர்கள் நடனமாடி சிலர் கண்ணீரை வெளிப்படுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

புதன்கிழமை துபாய் ஷார்ஜாவில் நடந்த ஆசிய கோப்பை 2022 இன் சூப்பர் ஃபோர் கட்ட கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்கள் இடம்பெற்றது.

2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குழுநிலையில் இலங்கை மற்றும் வங்காளதேசத்தை வென்ற பிறகு அவர்கள் சூப்பர் ஃபோர் கட்டத்திற்கு தகுதி பெற்றனர்.

ஆனால் சூப்பர் ஃபோர் கட்டத்தில் எந்த வெற்றியையும் பெற முடியவில்லை, இலங்கை, பாகிஸ்தானிடம் தோற்றது.

அதன்படி ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர் அப்துல்ஹக் ஒமேரி தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்த காணொளியில்,

இலங்கையின் வெற்றியின் பின்னர் சிலர் ஆரவாரத்துடன், சிலர் மகிழ்ச்சியுடன் நடனமாடியபடி, வீதியில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

இலங்கையின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கவும், குறிப்பாக பீல்டிங் செய்யும் போது, இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்திறனைப் பார்த்து கேலி செய்தும் மக்கள் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

171 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை, பாகிஸ்தான் அணியை 20 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்கு வீழ்த்தியது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...