இலங்கையில் அரசியல் அமைப்பின் பிரகாரம் சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகிறது என்கிறார் அலி சப்ரி

Date:

நாட்டின் அனைத்து இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு சமாந்தரமாக நடைபெறும் உயர்மட்ட சிறுபான்மை சமூக கூட்டமொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் அமைப்பின் பிரகாரம் சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகின்றதாகவும் இன சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத குரோத செயற்பாடுகளை மேற்கொள்வோருக்கு எதிராக எவ்வித நெகிழ்வுத் தன்மையும் காட்டப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...