இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை குறைவடைகிறது!

Date:

இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை தற்போது 7000 ஆக அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 5600 என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அண்மைய கணக்கீட்டின்படி, இந்நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 7000ஐ தாண்டியுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்  மகிந்த அமரவீரவிடம் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் இலங்கையின் காடுகளில் தற்போது யானைகளின் எண்ணிக்கை 142 ஆக இருப்பதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னேரியா, கிரித்தலே மற்றும் பராக்கிரம சமுத்திரத்தில் சுற்றித்திரியும் சுமார் 350 காட்டு யானைகள் காணாமல் போயுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர வனஜீவராசிகள் திணைக்களத்திடம் கேட்டறிந்தார்.

மேலும் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற சந்திப்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், மின்னேரியா, கிரித்தலே, பராக்கிரம சமுத்திரத்தை சூழவுள்ள காட்டுயானைகள் ஏனைய பிரதேசங்களுக்கு இடம்பெயர்வதால் காட்டு யானைகளினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...