இஸ்லாமிய நாகரிகம் துறையில் கலாநிதி பட்டப்படிப்புக்காக மலேசியா செல்லும் இலங்கை பெண்!

Date:

றோஷன் ஸபீஹா என்ற பெண் தனது கலாநிதிக் கற்கையைத் தொடர்வதற்காக இன்று மலேசியவுக்குச் செல்கிறார்.

இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம் கலாநிதிக் கற்கைக்காக வழங்கும் புலமைப் பரிசிலைப் பெற்று மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய சிந்தனைக்கும் நாகரிகத்துக்குமான சர்வதேச நிறுவகத்தில் இஸ்லாமிய நாகரிகத் துறையில் இவர் தனது கலாநிதிக் கற்கையைத் தொடரவுள்ளார்.

இதன் மூலம்  அவர் பிறந்த பிரதேசத்திலிருந்து  முதலாவதாக கலாநிதிக் கற்கைக்குச் செல்லும் பெண் எனும் சிறப்பையும் அவர் பெறுகிறார்.

இவர் ஹொரவ்பொத்தானை கிவ்ளேகடையைச் சேர்ந்த நிஸார் ஆசிரியரின் சிரேஷ்ட புதல்வியாவார்.

கல்-எலிய முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கற்று பேராதனிய பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு செரிவு செய்யப்பட்ட இவர் இஸ்லாமிய நாகரீகத்தை தனது சிறப்புத் துறையாகத் தெரிவு செய்து அதி விஷேட சித்தியுடன் அதனை நிறைவு செய்தார்.

பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் சில காலம் தற்காலிக விரிவுரையாளராப் பணி புரிந்தார்.

இக்காலப்பகுதியில் தனது முதுமானிப் பட்டத்தையும் பூர்த்தி செய்துவிட்டு இலங்கை ஆசிரிய சேவையில் இணைந்து கொண்டார்.

அவர் பயணிக்கும் நோக்கம் நிறைவேறுவதற்கும் அவரது சகல காரியங்களையும் வல்ல இறைவன் இலகுபடுத்திக் கொடுப்பதற்கும் உங்களது பிரார்த்தனைகளும் வலுச் சேர்க்கட்டும்.

முஸ்லிம் பெண் சமூகத்திலிருந்து இப்படியாக ஒரு துறைக்கு செல்லும் இந்த பெண் ஆளுமைக்கு எமது ‘நியுஸ் நவ்’ சார்பாக வாழ்த்துக்கள்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...