‘உதலு சவிய’:அரநாயக்கவில் உணவுப் பாதுகாப்பு செயற்திட்டம்!

Date:

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மற்றுமொரு நிகழ்ச்சி கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

‘உதலு சவிய’ எனும் இந்த நிகழ்ச்சித் திட்டமானது அரநாயக்க பிரதேச செயலாளர் இசட்.ஏ.எம்.பைஃப்சல் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் எச்.கார்டன் ஆகியோரின் பூரண அனுசரணையுடன் இடம்பெற்றது.

மேலும், எஸ். நிஸ்ஸங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அடையாளம் காணப்பட்ட மூன்று கிராம உத்தியோக பிரிவு குடும்பங்களைச் சேர்ந்த 60 பயனாளர்களுக்கு விதைகள் மற்றும் சேதனப்பசளை விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ரம்யா லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் டீ.எம். அலி சப்ரி, கேகாலை மாவட்ட சர்வமதக் குழு இணைப்பாளர் பந்துபால நாணயக்கார அப்பகுதி அரசாங்க அதிகாரிகள், கேகாலை மாவட்ட ரம்ய லங்கா இணைப்பாளர் வைத்தியர். எம்.ஐ.எம் அக்பர் அலி மற்றும் தேசிய சமாதான பேரவை உறுப்பினர்கள், ரம்ய லங்காவின் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...