எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஜனாதிபதி இங்கிலாந்து பயணம்!

Date:

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்துக்கு செல்லவுள்ளார்.

இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார்.

ஜனாதிபதி 17 அல்லது 18 ஆம் திகதி கிரேட் பிரிட்டனுக்கு செல்லவுள்ளார். எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் பிரித்தானிய மக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் 19ஆம் திகதி இலங்கையில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

1952 மற்றும் 1972 க்கு இடையில், ராணி இரண்டாம் எலிசபெத் காமன்வெல்த் தலைவராகவும் இலங்கை ராணியாகவும் இருந்தார்.

Popular

More like this
Related

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...