ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறியுள்ளது: சட்டத்தரணி நுவன் போபகே

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக உறுதியளித்த அரசாங்கம் தற்போது செயற்பாட்டாளர்களை அடக்குவதற்கு அதனைப் பயன்படுத்தியுள்ளதாக இளம் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இந்த விடயத்தை முன்வைக்கவுள்ளதாக அதன் செயற்குழு உறுப்பினர் நுவான் போபகே தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மனித உரிமைகள் பேரவையில் இந்த அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்டோர் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உண்மைகளை முன்வைக்க உள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, முஜிபர் ரஹ்மான் உள்ளிட்டோர் ஜெனீவா சென்றுள்ளனர்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...