கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பிரதான அரச நிறுவனங்களின் 18 கட்டிடங்கள் உட்பட பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

வர்த்தமானி அறிவித்தலின்படி, பாராளுமன்ற வளாகம், உச்ச நீதிமன்ற வளாகம், கொழும்பு உயர் நீதிமன்ற வளாகம், கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகம், சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படைத் தலைமையகம், பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு , இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தலைமையகம் , பிரதம மந்திரியின் செயலாளர் அலுவலகம்,  பாதுகாப்புச் செயலாளரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் இராணுவத் தளபதிகளின் குடியிருப்புகள் மற்றும் பல பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கொழும்பு நகரின் பெரும் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...