சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் இடைக்காலத் தலைவராக ஜாபரி தெரிவு

Date:

சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் இடைக்காலத் தலைவராக இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஹபீப் ஸாலிம் ஸக்காப் அல் ஜாபரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய மேற்கு சஹாரா பிராந்தியம் தொடர்பில் எழுந்த முரண்பாடுகளை அடுத்து ஒன்றியத்தின் தலைவர் அஹ்மத் ரைஸூனி கடந்த மாதம் பதவி விலகியிருந்த நிலையில் ஜனவரியில் நடைபெறவுள்ள தலைவர் தேர்வு வரையிலான காலப்பகுதிக்கு ஜாபரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மொரிடானியாவும் மொரோக்கோவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என தொலைக்காட்சி நேர்காணலொன்றில் ரைஸூனி தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியதையடுத்து அவர் பதவி விலகினார். இடைக்காலத் தலைமைப் பதவியை ஏற்றுள்ள ஜாபரி ஷரீஆத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவராவார்.

இந்தோனேஷியப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகக் கடமையாற்றிய இவர் இந்தோனேஷிய அரசாங்கத்தில் சமூக விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...