சுற்றுலா மற்றும் கல்வியை மேம்படுத்த நேபாளத்துடன் இலங்கை ஒப்பந்தம்!

Date:

இலங்கையின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையை எட்டுவதற்கான ஆரம்ப கலந்துரையாடல்  இன்று (14) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான நேபாள தூதுவர்  பசு தேவ் மிஸ்ரா கலந்துகொண்டார்.

இக்கலந்துரையாடலின் போது இரு நாட்டு இளைஞர்களும் பல்கலைக்கழக கல்வி மற்றும் சுற்றுலாத் துறை வாய்ப்புகளில் இணைவதற்கு இளைஞர் பரிமாற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக நடவடிக்கைகளை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் நேபாள அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...