ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கொலை வழக்கில் விடுதலைப்புலி உறுப்பினர் உள்ளிட்ட இருவர் விடுதலை!

Date:

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கம்பஹா முன்னாள் ஏ.எஸ்.பி லக்ஷ்மன் குரே மற்றும் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் என்ற மொரிஸ் ஆகியோரை கம்பஹா உயர்நீதிமன்றம் இன்று விடுதலை செய்து விடுதலை செய்தது.

குறித்த வழக்கு இன்று (செப்டம்பர் 1) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார இந்த உத்தரவை வழங்கினார்.

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி வெலிவேரிய கண்டி மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

புலிகளின் முன்னாள் உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் மற்றும் கம்பஹா முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செனரத் லக்ஸ்மன் குரே ஆகியோருக்கு எதிராக கொலைச் சதி உள்ளிட்ட 31 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

Popular

More like this
Related

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...

மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன!

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல தேசியப் பூங்காக்களை மீண்டும்...

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம் வழங்கி வைப்பு!

டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்...

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...