தமிழ் நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் காயல் மகபூபுக்கு தமிழ் இலக்கிய விருது வழங்கி கௌரவிப்பு!

Date:

தமிழ் நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் காயல் மகபூப் 50 ஆண்டு காலம் தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ்ச்சமுதாய உயர்வுக்காக பாரிய பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு தமிழ் இலக்கிய விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள சிம்சன் ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற இன்டர்நேஷ்னல் ஸ்டார் புக் ரிக்கார்ட்ஸ் விழாவில் ‘ஸ்ரீ ருத்ரக் ஷா’ கலை நடன பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் அரவிந்த் குமார் இந்த விருதை வழங்கி வைத்தார்.

இவ்விழாவில் பேராசிரியை முகம்மது பாத்திமாவுக்கு மதிப்புறு முனைவர் ( டாக்டர் ) பட்டம் வழங்கப்பட்டது.

பிராமண சமுதாயத்தை சேர்ந்த இவர் இஸ்லாத்தில் இணைந்து 1991ல் திருப்பூர் சையத் மஹபூபை மணமுடித்து 6 பட்டங்களை வென்று கல்விச் சேவையாற்றி வருகிறார்.

மேலும், இவ்விழாவில் மேலும் நால்வருக்கு இன்டர் நேஷனல் ஸ்டார் விருதுகளும் ஆசிரியப் பெருமக்கள் 24 பேருக்கு சிறந்த ஆசிரியர் விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!

நீர்ப்பாசனத் திணைக்களத்தால் விசேட அறிவிப்பொன்று பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் அனர்த்த சூழ்நிலைகளைக் குறைக்க மற்றும்...

உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பிறீமா குழுமம்

பிறீமா குழுமம் (Prima Group Sri Lanka) ஆனது, அண்மையில் நாட்டில்...

இன்று பல தடவைகள் மழை பெய்யும்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று...

முற்றாக சேதமடைந்துள்ள/மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள்

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில்...