நடமாடும் ஆய்வுகூடங்களுடன் கூடிய 8 பஸ்கள் சீனாவினால் வழங்கிவைப்பு!

Date:

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கா பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வதிகளைக் கொண்ட 8  நடமாடும் ஆய்வுகூட பஸ்கள் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த வாகனங்கள் 660 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென்ஹொங் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இந்த நடமாடும் ஆய்வுகூட பஸ்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்தநிலையில் வாகனங்களின் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் நடமாடும் ஆய்வுகூடங்களுடன் கூடிய இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சிறுநீரக நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாளாந்தம் சுமார் 500 பேரை பரிசோதிக்க முடியும் என்பதுடன், மாவட்ட மட்டத்திலும் உள்ளூராட்சி மன்ற மட்டத்திலும் சிறுநீரக நோயாளர்களை அடையாளம் காண முடியும்.

இந்த நடமாடும் ஆய்வுகூட பஸ்களில் சீனாவினால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை சுகாதார ஊழியர்கள் பணிபுரிவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...